Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வளம் பெறுகிறது வடிவுடையம்மன் கோவில் ... திரவுபதி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா திரவுபதி அம்மன் கோவில் கும்பாபிஷேக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோடிபுதூர் பத்திரகாளியம்மன் கோவில் திருவிழா: விமர்சையாக நடந்த பரணை ஏறுதல் நிகழ்ச்சி
எழுத்தின் அளவு:
கோடிபுதூர் பத்திரகாளியம்மன் கோவில் திருவிழா: விமர்சையாக நடந்த பரணை ஏறுதல் நிகழ்ச்சி

பதிவு செய்த நாள்

09 ஜூன்
2016
11:06

கோடிபுதூர் பத்திரகாளியம்மன் கோவில் திருவிழா: விமர்சையாக நடந்த பரணை ஏறுதல் நிகழ்ச்சிபோச்சம்பள்ளி: போச்சம்பள்ளி அருகே உள்ள பத்திரகாளியம்மன் கோவில் திருவிழாவில், முக்கிய நிகழ்வான பரணை ஏறுதல் நிகழ்ச்சி வெகுவிமர்சையாக நேற்று நடந்தது. கிருஷ்ணகிரி அடுத்த போச்சம்பள்ளி அருகே உள்ள கோடிபுதூரில், பத்திரகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின், 106வது ஆண்டு திருவிழா கடந்த, 6ம் தேதி சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜையுடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிழ்வான பரணை ஏறுதல் நிகழ்ச்சி நேற்று நடந்தது. பத்திரகாளியம்மன், அய்யனார், முருகன், கருப்பசாமி ஆகிய சுவாமிகளின் முன்பு, மூங்கிலால், ஐந்து பரண்கள் அமைக்கப்பட்டு, அதில் ஒரு பரணில் பன்றியையும், மற்ற, நான்கு பரண்களில், ஆடுகளும் ஏற்றப்பட்டன. அருள் வந்து சாமி ஆடிய பூசாரி, பரண் மீது ஏறி, பன்றியின் மார்பு பகுதியை கிழித்து, அதில் பழத்தை போட்டு, ரத்தத்துடன் கலந்து பூஜை செய்தார். பின்னர் அதை பக்தர்கள் கூட்டத்தை பார்த்து வீசினார். அதை குழந்தை வரம் வேண்டும் பெண்கள் பய பக்தியுடன் மடியேந்தி வாங்கி சாப்பிட்டனர். தொடர்ந்து பத்திரகாளியம்மனுக்கு மேள தாளங்கள் முழங்க, பெண்கள் மாவிளக்கு எடுத்து வழிபட்டனர். அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனை செய்யப்பட்டது. பின், 1000 க்கும் மேற்பட்ட ஆடுகளையும், பன்றிகளையும் பலியிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். திருவிழாவில், கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்தும், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ... மேலும்
 
temple news
அன்னூர்; சென்னையில் துவங்கி 700 கி.மீ., தூரம் பயணித்து, 500 கிராமங்கள் வழியாக அன்னூர் வந்த ஈஷா யோக மைய ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் சேலம் மாவட்டம் இடைப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ... மேலும்
 
temple news
கோவை: உக்கடம் பூமி நீளா சமேத கரிவரதராஜ பெருமாள் கோவிலில் உற்சவமூர்த்திகளான விநாயகப் பெருமான், ... மேலும்
 
temple news
இளையான்குடி; இளையான்குடி அருகே வளையனேந்தல் கிராமத்தில் உள்ள கூம்பாச்சி அம்மன் கோயிலுக்கு செல்லும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar