பதிவு செய்த நாள்
13
ஜூன்
2016
10:06
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் உற்சவர் சிலையை மாற்ற எதிர்ப்பு தெரிவித்து, பக்தர்கள் சார்பில், 22ம் தேதி உண்ணாவிரதம் இ ருக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்று விளங்கும் ஏகாம்பரநாதர் கோவில் உற்சவர் சிலை, 1,00-0 ஆண்டுகளுக்கு முற்பட்டது; விலை மதிப்பற்றது. ஆண்டுதோறும் நடக்கும் பிரமோற்சம் மற்றும் பிற உற்சவத்தின் போது, தற்போது உள்ள உற்சவர் சிலை தான் வீதிவுலாவுக்கு பயன்படுத்தப்பட்டது. இந்த சிலையில், ஒரே பீடத்தில் சுவாமியும், அம்மன் சிலையும் இருக்கும். அவற்றில், அம்மன் சிலையின் அடிப்பாகம் சேதம் அடைந்துள்ளதாக கூறப்பட்டது. இதனால் அந்த சிலையை மாற்ற வேண்டும் என, அறநிலையத்துறைக்கு கோவில் ஸ்தானிகர்கள் பரிந்துரை செய்துள்ளதாகவும், அதன்படி, ஆய்வு செய்து நிர்வாகம் வேறு சிலை செய்ய நடவடிக்கை எடுத்தது. இதற்கு ஆரம்பத்தில் இருந்தே பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இருந்தும் மாற்று உற்சவர் சிலை செய்யும் பணி நடந்து வருவதால், காஞ்சிபுரம் அனைத்து கோவில்கள் ÷ சவா சங்கம் சார்பில், வரும், 22ம் தேதி வணிகர் வீதியில் உண்ணாவிரத போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.