பெண்ணாடம்: அஷ்டமியையொட்டி, பெண்ணாடம் பிரளய காலேஸ்வரர் கோவிலில் நேற்று முன்தினம் பைரவருக்கு சிறப்பு பூஜை நடந்தது. காலை 8:00 மணியளவில் சுவாமிக்கு அபிஷேகம், 8:30 மணிக்கு தீபாராதனை நடந்தது. மாலை 5:30 மணிக்கு பைரவர் சுவாமி புஷ்ப அலங்காரத்தில் அரு ள்பாலித்தார். ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.