கண்ணேறு (திருஷ்டி) கழித்தல் என்பது ஆண்டாண்டு காலமாய் தமிழர்களால் கடைபிடிக்கப்படும் விஷயம். கண் திருஷ்டி என்பது அழகாக அலங்கரிக்கப்படும் தெய்வங்களுக்குக்கூட ஏற்படும் என்பது நம்பிக்கை. இது அனுபவ ரீதியான உண்மையும்கூட கல்லடி பட்டால் சிறிய அளவுதான் பிரச்னை. கண்ணடிபட்டால் பெரிய பாதிப்பு உண்டாகிறது. பூசணிக்காய் அல்லது தேங்காயை வீட்டைச் சுற்றி வந்து உடைத்தல், சாம்பிராணி போடுதல் ஆகியவையே பரிகாரம். ஆனால் மற்றவர்களுக்கு இடைஞ்சல் செய்த வகையில் இதைச் செய்ய வேண்டும்.