தன்னைவிட ராமபக்தியில் சிறந்தவர்கள் வேறு யாருமில்லை என்ற எண்ணம் ஆஞ்சநேயருக்கு உண்டானது. இருந்தாலும், ராமரிடமே இதைக் கேட்டுவிட்டால் முழுமையான சந்தோஷம் என்ற எண்ணத்துடன் துள்ளிக் குதித்தோடினார். “சுவாமி! ராமபக்தியில் சிறந்தவர் யார் என்று சொல்லுங்களேன் என்று ராமரிடம் கேட்டார். “இதிலென்ன சந்தேகம். சீதாதேவி தான்! அவள் தான் என் மீது அளவுகடந்த பக்தி கொண்டிருக்கிறாள், என்று பதிலளித்தார். ஆஞ்சநேயருக்கு துõக்கி வாரிப்போட்டது. சிலையாக நின்றுவிட்டார். அவரது மவுனத்தைக் கண்ட ராமர், “ஆஞ்சநேயா! நான் நலமாக வாழவேண்டும் என்று அவள் தானே அனுதினமும் நெற்றியில் செந்துõரத் திலகம் இடுகிறாள், என்று விளக்கம் கொடுத்தார்.அவ்வளவுதான்! ராமர் நலமோடு இருக்கவேண்டும் என்பதற்காகமேனி முழுவதும் செந்துõரம் பூசிக் கொண்டு வந்து நின்றார் ஆஞ்சநேயர். இதைக் கண்ட ராமன் நெக்குருகி, ஆஞ்சநேயா! உன்னை விட எனது பக்தியில் சிறந்தவர் வேறு யாருமில்லை, என்பதை உலகுக்கு உணர்த்தவே இந்த நாடகமாடினேன், என அன்போடு சொல்லி மார்புடன் அணைத்துக் கொண்டார். இந்நிகழ்ச்சியின் அடிப்படையிலேயே, ஆஞ்சநேயர் கோயிலில் செந்துõரம் பிரசாதமாகத் தரும் வழக்கம் ஏற்பட்டது.