கன்னிவாடி, :அமாவாசையை முன்னிட்டு தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. வாலை, அம்மனுக்கு சிறப்பு திருமஞ்சன அபிஷேகம் நடந்தது. விசேஷ மலர் அலங்காரத்துடன் பூஜைகள் நடந்தது. யோக ஆஞ்சநேயர், போகர், காளிங்க நர்த்தன கிருஷ்ணர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு ஆராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் திருவிளக்கு ஏற்றி வழிபாடு செய்தனர்.
* கன்னிவாடி சோமலிங்கசுவாமி கோயில், கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயில், சின்னாளபட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயில், ஆத்துார் காசி விசுவநாதர் கோயில்களில் அமாவாசை சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.