திருப்பதி உண்டியல் வசூல்: 2 நாட்களில் 2 கோடி ரூபாய்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஜூலை 2016 02:07
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் உண்டியல் காணிக்கையாக இரண்டு நாட்களில் 2 கோடி ரூபாய் வசூலானது என்று தேவஸ்தான அதிகாரிகள் கூறியுள்ளனர். திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் கூட்டம், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த செவ்வாய் மற்றும் புதன் ஆகிய 2 நாட்களிலும் பக்தர்கள் காணிக்கையாக உண்டியலில் 2 கோடி ரூபாய் வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.