விழுப்புரத்தை அடுத்த ரிஷிவந்தியத்திலுள்ள முக்தாம்பிகை சமேத அர்த்த நாரீஸ்வரர் கோயிலின் மூலவரான லிங்கத்துக்கு தேனாபிஷேகம் நடைபெறும்போது லிங்க பாணத்தை நன்கு கவனித்துப் பார்த்தால், அம்மன் தன் கையில் கிளி வைத்துக் கொண்டு நிற்பது போன்ற தோற்றத்தைக் காணலாம். மற்ற நேரங்களில் லிங்கம் சாதாரணமாகத்தான் தெரியும்.