நெல்லிக்குப்பம்: பில்லாலி திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது. நெல்லிக்குப்பம் அடுத்த பில்லாலி திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா கடந்த 8ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, இரவில் அம்மன் வீதியுலா நடைபெற்றது. கடந்த 13ம் தேதி அர்ச்சுணன் திரவுபதி திருக்கல்யாணம் உற்சவம் நடந்தது. 15ம் தேதி மாலை அம்மன் சிறப்பு அலங்காராத்தில் எழுந்தருள பூசாரி மணி பூங்கரகத்துடன் முதலில் தீமிதிக்க அவரைத் தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் தீமிதித்து நேர்த்தி கடன் செலுத்தினர்.