நெட்டப்பாக்கம்: வடுக்குப்பம், பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில், இன்று 21ம் தேதி, திருமஞ்சனம் நடக்கிறது. நெட்டப்பாக்கம் அடுத்துள்ள வடுக்குப்பம் கிராமத்தில் அமைந்துள்ள, பத்மாவதி தாயார் சமேத பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில், ஆடி மாதத்தையொட்டி, இன்று 21 ம் தேதி காலை 10:௦௦ மணிக்கு, ஆடி திருமஞ்சனம் நடக்கிறது. இதையொட்டி, காலை 6:௦௦ மணிக்கு, பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடக்கிறது. தொடர்ந்து மதியம் 1:௦௦ மணிக்கு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். விழா ஏற்பாடுகளை, வடுக்குப்பம் கிராம மக்கள் செய்துள்ளனர்.