Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வனபத்ரகாளியம்மன் கோவிலில் ... பண்ருட்டி படைவீட்டம்மன் கோவில் திருத்தேரோட்டம் பண்ருட்டி படைவீட்டம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆடி வெள்ளியில் அம்மனை நாடி வந்த பக்தர்கள்: கோவில்களில் சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
ஆடி வெள்ளியில் அம்மனை நாடி வந்த பக்தர்கள்: கோவில்களில் சிறப்பு வழிபாடு

பதிவு செய்த நாள்

23 ஜூலை
2016
12:07

கோவை :ஆடி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, கோவை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள கோவில்களில், நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது.கோவை நகரில் மத்தியில், காவல் தெய்வமாக வீற்றிருக்கும் கோனியம்மன் கோவிலில், நேற்று காலை, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. காலை முதல் இரவு வரை, தொடர்ந்து பூஜைகள் நடந்தன. அவிநாசி ரோடு மேம்பாலம் அருகில் உள்ள தண்டு மாரியம்மன் கோவிலில், அம்மனுக்கு, அபிஷேகம் ஆராதனை நடந்தது. பொள்ளாச்சி ரோடு, ஈச்சனாரியில் உள்ள, மகாலட்சுமி மந்திரில், துர்க்கை அம்மன், மகாலட்சுமி அம்மன், சரஸ்வதி தெய்வங்கள் பூ அலங்காரத்தில் அருள்பாலித்தனர். பொள்ளாச்சி ரோடு, குறிச்சி குளக்கரையில் உள்ள, பொங்காளியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடந்தது.

ராஜவீதி ராமலிங்க சவுடாம்பிகை அம்மன் கோவிலில், நேற்று காலை அம்மனுக்கு பால், நெய் உள்ளிட்ட திரவியங்களில் அபிஷேகமும் சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது. இதேபோல், சுந்தராபுரம், சாரதாமில் ரோடு முத்துமாரியம்மன் கோவில், பீளமேடு, சேரன்மாநகர், மகாலட்சுமி கோவில், நல்லாம்பாளையத்தில் உள்ள பொங்காளியம்மன் கோவில்களில், சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. விளாங்குறிச்சி ரோடு, வெங்கடாசலபதி நகரிலுள்ள, கற்பக விநாயகர், கருமாரியம்மன் கோவிலில், ஸ்ரீ வாராஹி அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சேரன்மாநகரில் உள்ள, மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், சிறப்பு அலங்காரத்தில் துர்க்கை அம்மன்பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகள் சிறப்பு வாய்ந்ததாக உள்ளதால், அனைத்து கோவில்களிலும், ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று வழிபட்டனர். கோனியம்மன் கோவில், தண்டுமாரியம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்கள் முன், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; காவிரி தென்கரையில் உள்ள தளங்களில் 26-வது தலமாக ஆதிகும்பேஸ்வர சாமி கோவில் உள்ளது. உலகம் ... மேலும்
 
temple news
இளையான்குடி; இளையான்குடி ராஜேந்திர சோழீஸ்வரர் கோயிலில் இன்று நவ.3ம் தேதி மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக ... மேலும்
 
temple news
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் தைலக்காப்பு உற்ஸவத்தை முன்னிட்டு மலைமீதுள்ள நுாபுர ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் கைசிகதுவாதசியை முன்னிட்டு ஏழுமலையான் கருவறையில் இருக்கும் உக்கிர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar