புதுச்சத்திரம்: புதுச்சத்திரம் அடுத்த வில்லியநல்லூர் ரேணுகாம்பிகை கோவிலில் செடல் உற்சவம் நடந்தது. கடந்த 17ம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சி யுடன் துவங்கியது. தொடர்ந்து தினமும் சுவாமிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை மற்றும் வீதியுலா நடந்தது. 18ம் தேதி முதல் 21ம் தேதி வரை தினமும் இரவு 9:00 மணிக்கு காத்தவராயன் கதை நடந்தது. முக்கிய விழாவான செடல் உற்சவம் நேற்று நடந்தது. அதனையொட்டி காலை 10:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. மதியம் 2:00 மணிக்கு கழுமரம் ஏறுதலும், மாலை 4:00 மணிக்கு செடல் உற்சவமும் நடந்தது. இன்று 23ம் தேதி மஞ்சள் நீர் விளையாட்டு மற்றும் அம்மன் வீதியுலா நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்கின்றனர்.