ஸ்ரீநகர் : காஷ்மீரில் உள்ள அமர்நாத் குகைக்கோயிலில் உள்ள பனிலிங்கத்தை தரிசிப்பதற்கான புனிதயாத்திரை ஜூலை 2 ம் தேதி தொடங்கியது. அடுத்த மாதம் 18ம் தேதி வரை இந்த யாத்திரை நடைபெறும். இந்நிலையில், காஷ்மீரில் பயங்கரவாதி பர்கான் வானி சுட்டுக்கொல்லப்பட்டதால் ஏற்பட்ட பதற்றமான சூழல் காரணமாக அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன், காஷ்மீரில் பதற்றம் தணிந்து இயல்பு நிலை திரும்பியதால் யாத்திரை மீண்டும் துவங்கியது. ஜூலை 24 ம் தேதி நிலவரப்படி 23 நாட்களில் அமர்நாத் பனிலிங்கத்தை இதுவரை 2,02,500 பேர் தரிசனம் செய்துள்ளனர். இந்நிலையில் தற்போது மீண்டும் அமர்நாத் யாத்திரை நிறுத்தி மீண்டும் வைக்கப்பட்டுள்ளது. தற்போது அங்கு கனமழை பெய்து வருவதால், சாலைகள் பயணம் மேற்கொள்ள முடியாத அளவிற்கு மோசம் அடைந்துள்ளது. தெற்கு காஷ்மீரின் அமர்நாத் குகையில் நேற்று மட்டும் சுமார் 800 யாத்ரீகர்கள் தரிசனம் செய்தனர். காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் பெய்து வரும் கனமழையால் அமர்நாத் யாத்திரை நிறுத்து வைக்கப்படுவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.