பாலமுருகன் கோவிலில் பக்தருக்கு மிளகாய் பொடி அபிஷேகம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஜூலை 2016 11:07
பண்ருட்டி: புலவனுார் பாலமுருகன் கோவிலில் ஆடிகிருத்திகையை முன்னிட்டு நேற்று பக்தர்கள் அலகு குத்தியும், மிளகாய் பொடி அபிஷேகம் செய்தும் நேர்த்திக் கடன் செலுத்தினர். ஆடி கிருத்திகையை முன்னிட்டு நேற்று காலை 7:30 மணிக்கு தென்பெண்ணையாற்றில் காவடி அபிஷேக ஆராதனை நடந்தது. பிற்பகல் 2:00 மணியளவில் ஏராளமான பக்தர்கள் செடல் போட்டுக் கொண்டனர். 3:00 மணிக்கு மிளகாய் பொடி அபிஷேகம், பால், பன்னீர்அபிஷேகம், தேர் இழுத்தல், தீச்சட்டி ஏந்துதல், அலகு குத்துதல் உள்ளிட்ட நேர்த்திக் கடன் செலுத்தினர். இன்று 29ம் தேதி இரவு இடும்பன் பூஜை நடக்கிறது.