திருபுவனை: மதகடிப்பட்டுப்பாளையம் துலுக்கான மாரியம்மன் கோவிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு காவடி பூஜை நேற்று நடந்தது. விழாவையொட்டி காலை 10.45 மணிக்கு துலுக்கான மாரியம்மன், முருகன் உள்ளிட்ட சாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் முருகனுக்கு காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். சிறப்பு அலங்காரத்தில் முருகர் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் தனி அதிகாரி சக்கரவர்த்தி மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.