இளையான்குடி: திருவள்ளூர் கீழத்தெரு முத்துமாரியம்மன் முளைப்பாரி விழா நடந்தது. ஜூலை 26 இரவு பெண்கள் முளைப்பாரியை ஊர்வலமாக எடுத்துச் சென்று முத்துமாரியம்மன் கோயிலில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்தனர். நேற்றுமுன்தினம் காலை 11.00 மணிக்கு முளைப்பாரியை ஊர்வலமாக எடுத்துச் சென்று, சங்கையா கோயில்முன் வைத்து வழிபட்டனர். பின் அமிர்த காளியம்மன் கோயில் ஊரணியில் கரைத்தனர்.