விருத்தாசலம்: விருத்தாசலம் ஜெகமுத்து மாரியம்மன் கோவிலில் செடல் திருவிழா நடந்தது. விருத்தாசலம் ஜங்ஷன் சாலையில் உள்ள ஜெகமுத்து மாரியம்மன் கோவிலில், ஆடி இரண்டாம் வெள்ளியையொட்டி, செடல் திருவிழா நடந்தது. இதில் செடல் அணிந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். இதையொட்டி, காலை 7:00 மணிக்கு அம்மனுக்கு அபிஷேக ஆராதனை, காலை 10:00 மணிக்கு மனிமுக்தா ஆற்றங்கரையில் செடலணிந்து, பால், இளநீர் காவடி ஏந்தி ஏராளமான பக்தர்கள் முக்கிய வீதிகளின் வழியாக கோவிலுக்கு வந்தனர். இதனை தொடர்ந்து மாலை 6:00 மணிக்கு நடந்த திருவிளக்கு பூஜையில் ஏராளமான சுமங்கலி பெண்கள் திருவிளக்கு ஏற்றி நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு 7:00 மணிக்கு சந்தனகாப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார்.