Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சித்தலூர் கோவிலில் அடிப்படை வசதி ... கோட்டை மாரியம்மன் கோவில் கம்பம் நடும் விழா கோலாகலம் கோட்டை மாரியம்மன் கோவில் கம்பம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
52 ஆண்டுகளாக கிராம மக்களுக்கு மகாபாரத கதை சொல்லும் முதியவர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஆக
2016
12:08

கொளத்தூர்: கொளத்தூர் அருகே, 82 வயது முதியவர் தொடர்ந்து, 52வது ஆண்டாக, ஆடி 1ம் தேதி துவங்கி, 18 நாட்கள் தினமும் இரவு மகாபாரத நீதி கதையை மக்களுக்கு கூறி வருகிறார். சேலம் மாவட்டம், கொளத்தூர் அருகே, கோவிந்தபாடி அடுத்த பாரதியார் தோட்டத்தை சேர்ந்தவர் முதியவர் குழந்தைகவுண்டர், 82. மனைவி பொன்னுதாயி. சிறுவயதிலேயே குழந்தை கவுண்டர் வீட்டிலுள்ள பெருமாள் சிலை அருகே அமர்ந்து, மகாபாரத கதையை பாடலாக பாடுவது வழக்கம். மகாபாரதத்தில் குருஷேத்திர போர் ஆடி 1ம் தேதி துவங்கி, 18 நாட்கள் நடந்தது. இறுதிநாளான, ஆடி 18 அன்று போர் முடிந்து பாண்டவர்கள் தங்கள் ஆயுதங்களை காவிரியாற்றில் சுத்தம் செய்து இறைவனை வழிபாடு செய்ததாக தெரிகிறது. அதர்மம் அழிந்து, தர்மம் வென்றதையும், போரில் ஏற்பட்ட வெற்றியை கொண்டாடும் வகையிலும், ஆடி18 பண்டிகையை காவிரி கரையோர மக்கள் கொண்டாடுவதாக கூறப்படுகிறது. இதனால், குழந்தை கவுண்டர் கடந்த, 52 ஆண்டுகளாக ஆடி 1ம் தேதி துவங்கி, 18 நாட்கள் தினமும் இரவு, 8 மணிக்கு துவங்கி, அதிகாலை வரை மகாபாரத சொற்பொழிவாற்றுகிறார். சுற்றுப்பகுதி மக்கள் இரவு முழுவதும் கண்விழித்து அமர்ந்து கேட்கின்றனர். சொற்பொழிவு கேட்கும் மக்களுக்கு குழந்தை கவுண்டர் குடும்பத்தினர் தினமும் உணவு சமைத்து வழங்குகின்றனர். ஆடி 18ம் தேதி மகாபாரதத்தின் இறுதி கதையை கூறும் குழந்தை கவுண்டர், குரு?ஷத்திர போர் நிறைவடைந்ததை நினைவு கூறும் வகையில், நேற்று அதிகாலை காவிரியாற்றுக்கு சென்று நீராடி மீண்டும் வந்து தர்மன் பட்டம் சூட்டியதை கூறி, சொற்பொழிவை நிறைவு செய்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு: கேரள மாநிலத்தில் உலகப் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா, பல்வேறு சிறப்பு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் சித்திரை தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் சித்திரைப் பெருவிழா திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
கோவை :  கோவை மாவட்டம்  காரமடை அரங்கநாத ஸ்வாமி கோவிலில் சித்திரை மாத சுக்ல பட்ச ஏகாதசி முன்னிட்டு ... மேலும்
 
temple news
 கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில், சித்திரை பிரம்மோற்சவத்தையொட்டி, சேஷ வாகனத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar