கீழக்கரை: திருப்புல்லாணி ஆதிஜெகந்நாதப்பெருமாள் கோயிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு ஆண்டாள் சன்னதியில் மூலவருக்கு சிறப்பு திருமஞ்சன அபிஷேகம் நடந்தது. பெருமாள் சமேத ஆண்டாள் சர்வ அலங்காரத்தில் ஊஞ்சல் சேவை மூலம் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.