பாகம்பிரியாள் கோயிலில் ரூ.22 லட்சம் உண்டியல் வசூல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஆக 2016 11:08
திருவாடானை: திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயிலில் ரூ.22 லட்சம் உண்டியல் வசூலானது.திருவாடானை அருகே திருவெற்றியூரில் பிரசித்தி பெற்ற பாகம்பிரியாள் கோயில் உள்ளது. இக் கோயிலில் உள்ள 9 பிரார்த்தனை உண்டியல்கள் நேற்று திறக்கபட்டன. இதில் ரொக்கம் ரூ.17 லட்சத்து 69 ஆயிரத்து 561, தங்கம் 193 கிராம், வெள்ளி 735 கிராம் இருந்தது. மொத்த மதிப்பு ரூ.22 லட்சம் என கணக்கிடபட்டுள்ளது. சிவகங்கை தேவஸ்தான மேலாளர் இளங்கோ, இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் ராமசாமி, கண்காணிப்பாளர் சரவணகணேசன், ஆய்வாளர் சுந்தரேஸ்வரி, கவுரவ கண்காணிப்பாளர் முத்துகண்ணன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.