பதிவு செய்த நாள்
17
ஆக
2016
10:08
வேலுார்: இந்த மாத பவுர்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் குறித்து, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில், பவுர்ணமி கிரிவலம் மிகவும் பிரசித்தி பெற்றது. ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாளில், தமிழகம் மட்டுமல்லாமல் பிற மாநிலங்களில் இருந்தும், திருவண்ணாமலைக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இந்த மாதத்தில் பவுர்ணமி, இன்று, மாலை, 4:48 மணிக்கு துவங்கி, நாளை மாலை, 3:53 மணிக்கு முடிவடைகிறது. இந்த நேரத்தில் கிரிவலம் செல்வது உகந்ததாகும் என்று, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.