Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மழைநீர் சேகரிப்பால் நிரம்பிய ... திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு! திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சங்கரன்கோவிலில் ஆடித்தபசு விழா கோலாகலம்
எழுத்தின் அளவு:
சங்கரன்கோவிலில் ஆடித்தபசு விழா கோலாகலம்

பதிவு செய்த நாள்

17 ஆக
2016
10:08

திருநெல்வேலி: சங்கரன்கோவிலில் நடந்த ஆடித்தபசு திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோயிலில், ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் நடக்கும் ஆடித்தபசு விழா பிரசித்திபெற்றது.சிவனும், விஷ்ணுவும் ஒன்றே என்ற தத்துவத்தை விளக்கும் வகையில் ஆடி மாதத்தில், கோமதிக்கு சுவாமி சங்கரநாராயணராக, சங்கரலிங்கசுவாமி காட்சியளிக்கும் வைபவம் நடக்கிறது. இந்த ஆண்டுக்கான தபசுத் திருவிழா கடந்த 6ம் தேதி காலை 5:57 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலையில் அம்பாள் ரதவீதி உலா நடந்தது.

இரவில் சப்பரங்களில் வீதிஉலா வந்தார். 9ம் திருநாளன்று கடந்த 14ம் தேதி கோமதி அம்பாள் தேரோட்டம் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான ஆடித்தபசுக் காட்சி நேற்று நடந்தது. கோயிலில் இருந்து காலை 11.45 மணிக்கு கோமதியம்பிகை தவக்கோலத்தில் தங்கச்சப்பரத்தில் எழுந்தருளி தெற்குரதவீதியில் உள்ள தபசுமண்டபத்தை அடைந்தார். அங்கு மாலை வரை பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலையில் சுவாமி சங்கர நாராயணர், அலங்கரிக்கப்பட்ட வெள்ளி ரிஷபவாகனத்தில் எழுந்தருளி தெற்குரத வீதியில் உள்ள தபசு பந்தலை அடைந்தார். தபசு மண்டபத்தில் கோமதி அம்பாள் ஒற்றைக்காலில் தவம் செய்யும் கோலத்துடன் தங்கச்சப்பரத்தில் தவசு பந்தலுக்கு வந்தார்.சுவாமியை அம்பாள் மூன்று முறை வலம் வந்த பிறகு சுவாமி, அம்பாளுக்கு பட்டு, பரிவட்டம், மாலை மாற்றும் வைபவம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு கோமதி அம்பாளுக்கு சுவாமி சங்கரநாராயணராக காட்சி கொடுத்தார்.அப்போது சுவாமி, அம்பாளுக்கு தீபாராதனை நடந்தது. கூடியிருந்த பக்தர்கள் சங்கரா, நாராயணா.. என்று விண்ணதிர பக்தி கோஷங்களை எழுப்பி தரிசனம் செய்தனர். இரவு 12:00 மணிக்கு சுவாமி வெள்ளியானை வாகனத்தில் எழுந்தருளி மீண்டும் தபசு பந்தலுக்கு வந்து அம்பாளுக்கு சங்கரலிங்கமாக காட்சி கொடுத்த இரண்டாம் தவசுக்காட்சி நடந்தது. இதையடுத்து சுவாமி, அம்பாள் இருவரும் வீதிஉலாவாக கோயிலுக்கு திரும்பினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று நடந்த மயானக்கொள்ளை நிகழ்ச்சியில் தமிழகம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; தஞ்சாவூர் பெரிய கோவில் உள்ளிட்ட  சிவாலயங்களில் மகாசிவராத்திரி விழா நடைபெற்றது. ... மேலும்
 
temple news
அன்னூர்; மகா சிவராத்திரியை முன்னிட்டு, அன்னூர், மன்னீஸ்வரர் கோயிலில் பல ஆயிரம் பக்தர்கள் திரண்டனர். ... மேலும்
 
temple news
கோவை: ‘‘சனாதன தர்மம் என்பது பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு உயிரினத்துக்குமான வாழ்க்கை நெறிமுறை,’’ என, ... மேலும்
 
temple news
உடுமலை: திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில் மூலவர் கோபுரமாக திருச்சப்பரம் நேற்று நிறுவப்பட்டது; ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar