Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மழைநீர் சேகரிப்பால் நிரம்பிய ... திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு! திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சங்கரன்கோவிலில் ஆடித்தபசு விழா கோலாகலம்
எழுத்தின் அளவு:
சங்கரன்கோவிலில் ஆடித்தபசு விழா கோலாகலம்

பதிவு செய்த நாள்

17 ஆக
2016
10:08

திருநெல்வேலி: சங்கரன்கோவிலில் நடந்த ஆடித்தபசு திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோயிலில், ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் நடக்கும் ஆடித்தபசு விழா பிரசித்திபெற்றது.சிவனும், விஷ்ணுவும் ஒன்றே என்ற தத்துவத்தை விளக்கும் வகையில் ஆடி மாதத்தில், கோமதிக்கு சுவாமி சங்கரநாராயணராக, சங்கரலிங்கசுவாமி காட்சியளிக்கும் வைபவம் நடக்கிறது. இந்த ஆண்டுக்கான தபசுத் திருவிழா கடந்த 6ம் தேதி காலை 5:57 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலையில் அம்பாள் ரதவீதி உலா நடந்தது.

இரவில் சப்பரங்களில் வீதிஉலா வந்தார். 9ம் திருநாளன்று கடந்த 14ம் தேதி கோமதி அம்பாள் தேரோட்டம் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான ஆடித்தபசுக் காட்சி நேற்று நடந்தது. கோயிலில் இருந்து காலை 11.45 மணிக்கு கோமதியம்பிகை தவக்கோலத்தில் தங்கச்சப்பரத்தில் எழுந்தருளி தெற்குரதவீதியில் உள்ள தபசுமண்டபத்தை அடைந்தார். அங்கு மாலை வரை பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலையில் சுவாமி சங்கர நாராயணர், அலங்கரிக்கப்பட்ட வெள்ளி ரிஷபவாகனத்தில் எழுந்தருளி தெற்குரத வீதியில் உள்ள தபசு பந்தலை அடைந்தார். தபசு மண்டபத்தில் கோமதி அம்பாள் ஒற்றைக்காலில் தவம் செய்யும் கோலத்துடன் தங்கச்சப்பரத்தில் தவசு பந்தலுக்கு வந்தார்.சுவாமியை அம்பாள் மூன்று முறை வலம் வந்த பிறகு சுவாமி, அம்பாளுக்கு பட்டு, பரிவட்டம், மாலை மாற்றும் வைபவம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு கோமதி அம்பாளுக்கு சுவாமி சங்கரநாராயணராக காட்சி கொடுத்தார்.அப்போது சுவாமி, அம்பாளுக்கு தீபாராதனை நடந்தது. கூடியிருந்த பக்தர்கள் சங்கரா, நாராயணா.. என்று விண்ணதிர பக்தி கோஷங்களை எழுப்பி தரிசனம் செய்தனர். இரவு 12:00 மணிக்கு சுவாமி வெள்ளியானை வாகனத்தில் எழுந்தருளி மீண்டும் தபசு பந்தலுக்கு வந்து அம்பாளுக்கு சங்கரலிங்கமாக காட்சி கொடுத்த இரண்டாம் தவசுக்காட்சி நடந்தது. இதையடுத்து சுவாமி, அம்பாள் இருவரும் வீதிஉலாவாக கோயிலுக்கு திரும்பினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயில், ந.வைரவன்பட்டி வளரொளிநாதர் கோயில்களில் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவத்தில் இன்று மோகினி ... மேலும்
 
temple news
திருப்பதி;  ஜனாதிபதி திரௌபதி முர்மு திருமலையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி இன்று தரிசனம் ... மேலும்
 
temple news
டில்லி; டில்லியில் விஜய யாத்திரை மேற்கொண்டுள்ள சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீட ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர பாரதீ ... மேலும்
 
temple news
கோவை;  கார்த்திகை மாதம் அனுஷம் நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை வடவள்ளி கஸ்தூரி நாயக்கன்பாளையம் கே. எஸ். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar