நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் 21ம் ஆண்டு திருவிளக்கு பூஜை நடந்தது. பூஜையையொட்டி, கடந்த 12ம் தேதி சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு திருவிளக்கு பூஜை நடந்தது. பூஜையை சந்திரசேகர் சர்மா, வைச சித்தாந்த ரத்தினம் ராஜன், குமார் ஆகியோர் செய்தனர். பூஜையில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். இரவு 9:00 மணிக்கு உற்சவர் அம்மன் ஆலய உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.