திருவாடானை: தொண்டி அருகே நம்புதாளை கண்மாய்கரை குடியிருப்பில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று காலை 10 மணிக்கு நடந்த கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கோயில் முன்பிருந்த விநாயகர் கோயில் கும்பத்திற்கும் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க புனித நீர் ஊற்றினர். அன்னதானம், கலைநிகழ்ச்சிகள் நடந்தன.