பதிவு செய்த நாள்
25
ஆக
2016
10:08
திண்டுக்கல், திண்டுக்கல் கூட்டுறவு நகர் செல்வவிநாயகர், பாலமுருகன், பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. இங்கு அரச மரமும், வேம்புவும் இணைந்த வடிவில் உள்ளன. இதனால் பரணி நட்சத்திரத்தையொட்டி நேற்று அரசுக்கும், வேம்புவுக்கும் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. பட்டாடை திருக்கல்யாண ஹோமங்கள், சடங்குகள் செய்யப்பட்டது. திருநாணுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மாங்கல்ய தாரணம் செய்யப்பட்டு திருக்கல்யாண விழா நடந்தது.அர்ச்சகர் துளசிராஜ் கூறுகையில், “குழந்தை பேறு இல்லாதவர்கள் இங்கு தொட்டில் கட்டி போட்டால் விரைவாக குழந்தை பேறு கிடைக்கும். மாங்கல்ய யோகம் இல்லாதவர் கூட இந்த பூஜையில் பங்கேற்கலாம், என்றார்.பழநியில் கார்த்திகைப் பெருவிழா: திருக்கார்த்திகை விழாவைமுன்னிட்டு திருஆவினன்குடிகோயிலில் மதியம் 12:00 மணிக்கு குழந்தை வேலாயுதசுவாமி, சனிபகவான், தட்சிணாமூர்த்திக்கு அபிஷேக ஆராதனை மற்றும் வெள்ளிகவச அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதைபோல பழநி மலைக்கோயில் ஞானதண்டாயுத பாணிக்கு அபிஷேகம், பூஜை செய்யப்பட்டது. கலையரங்கில் பக்தி இன்னிசை, சொற்பொழிவு நடந்தது. மாலையில் 108 திருவிளக்கு பூஜையில் பெண்களுக்கு தாலிக்கயிறு, மஞ்சள், குங்குமம் பிரசாதமாக வழங்கபட்டது. இதைப்போல பெரியநாயகியம்மன்கோயில், திருஆவினன்குடி கோயிலில் இரவு 7 மணிக்குமேல் சுவாமி புறப்பாடு நடந்தது. மலைக்கோயில் தங்கரதப்புறப்பாட்டில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.