பதிவு செய்த நாள்
25
ஆக
2016
10:08
திருப்போரூர்: திருப்போரூர், கந்தசுவாமி கோவிலில் ஆவணி கிருத்திகை விழாவில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். காஞ்சிபுரம் மாவட்டம், திரு ப்போரூரில், பிரசித்தி பெற்ற கந்தசுவாமி கோவில் உள்ளது. இங்கு,ஆவணி கிருத்திகை விழா நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில், கந் தசுவாமி பெருமானுக்கு, சிறப்பு அர்ச்சனைகளும் , தீபாராதனைகளும் நடை பெற்றன. விழாவில், சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தின், பல்வேறு பகுதிகளிலிருந்து, ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, முடி காணிக்கை செலுத்தி, சரவணப் பொய்கையில் நீராடி, அலகு குத்தி, காவடிகள் எடுத்தும் நேர்த்திக்கடன்களை செலுத்தினர். மாலையில் வள்ளி,தெய்வானையுடன், சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய, உற்சவர் கந்தசுவாமி பெருமான், மாடவீதிகளில் திருவீதியுலா வந்து ப க்தர்களுக்கு அருள்பாலித்தார். மாட வீதிகளில் வசித்துவரும் உள்ளூர்வாசிகள் கந்த பெருமானுக்கு அர்ச்சனைகள் செய்து வழிபட்டனர். மேலும், நேற்று நாள் முழுவதும், திருக்கோவிலை சுற்றிலும் ஆங்காங்கே அன்னதானம் பக்தர்களுக்கு வழங்க ப்பட்டது.