கடலுார்: கடலுார் புதுப்பாளையத்தில் கிருஷ்ண ஜெயந்தியொட்டி உறியடி உற்சவம் நடந்தது. கடலுார், புதுப்பாளையம் திரவுபதியம்மன் ÷ காவிலில் உள்ள கிருஷ்ணர் சன்னதியில் கிருஷ்ண ஜெயந்தியொட்டி நேற்று முன்தினம் காலை சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பக்தர்கள் திரளாக பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இரவு கிருஷ்ணர் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது. வீதியுலாவின் போது, நடந்த உறியடி உற்சவத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை போட்டி போட்டு உறியடித்தனர்.