பொள்ளாச்சி: ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் உண்டியல் திறக்கப் பட்டு நேற்று காணிக்கை எண்ணப்பட்டது. மொத்தம் 50லட்சத்து 28 ஆயிரத்து 395 ரூபாய் வசூலாகியது. பொள்ளாச்சி அருகே ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் உள்ள 16 நிரந்தர உண்டியல்கள் மற்றும் ஒன்பது காணிக்கை உண்டியல்கள் நேற்று திறக்கப்பட்டு, காணிக்கை எண்ணப்பட்டது. இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஆனந்த் தலைமை வகித்தார். மாசாணியம்மன் கோவில் உதவி ஆணையர் கார்த்திக், இந்துசமயஅறநிலையத்துறை பொள்ளாச்சி ஆய்வர் புவனேஸ்வரி முன்னிலை வகித்தனர். இதில், 16 நிரந்தர உண்டியல்களில், 37 லட்சத்து 48ஆயிரத்து 999 ரூபாயும்; ஒன்பது காணிக்கை உண்டியல்களில், 12 லட்சத்து 79 ஆயிரத்து 396 ரூபாயும் சூலாகியது. தங்கம், 221 கிராம் மற்றும் 700 மில்லி கிராமும்; வெள்ளி, 373 கிராம் மற்றும் 400 மில்லிகிராமும் இருந்தது. புலவர் லோகநாதன், திருக்கோவில் பணியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.