Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நேர்த்திக்கடனை நிறைவேற்ற கால ... நல்லதைப் பின்பற்றுங்கள்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
ஒரே ஊரில் 11 திவ்யதேசங்கள்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஆக
2016
02:08

பெருமாளின் திவ்யதேசங்கள் 108. இதில் 11, ஒரே ஊரில் இருக்கிறது என்றால் ஆச்சரியம் தானே! அந்த பெருமைக்குரிய ஊர் தான் திருநாங்கூர். இங்கு திருக்காவளம்பாடி, திருஅரிமேயவிண்ணகரம், திருவண் புருடோத்தமம், திருச்செம்பொன்கோவில், திருமணிமாடக்கோவில், திருவைகுந்த விண்ணகரம் என்னும் ஆறு திவ்யதேசங்கள் ஊருக்குள்ளேயே அமைந்துள்ளன. ஊரைச் சுற்றி சற்று தொலைவில் திருத்தேவனார்தொகை, திருத்தெற்றியம்பலம், திருமணிக்கூடம், திருவெள்ளக்குளம், திருப்பார்த்தன்பள்ளி ஆகிய ஐந்து தலங்கள் உள்ளன. இவற்றை திருநாங்கூர் 11 திவ்யதேசங்கள் என்று அழைப்பர். தட்சனின் யாகத்தை தடுக்கச் சென்ற, சிவனின் மனைவியான தாட்சாயிணியை அவளது தந்தை அவமானப்படுத்தினான். இதனால் கோபமடைந்த சிவன் ருத்ர தாண்டவம் ஆடினார். சிவனின் ஜடாமுடி அவிழ்ந்து, முடி தரையில் படும் போதெல்லாம் அதிலிருந்து ருத்ரமூர்த்திகள் வெளிவரத் தொடங்கினர். இப்படி 11 ருத்ரர்கள் வெளிவர, தேவர்கள் செய்வதறியாமல் திருமாலைச் சரணடைந்தனர். திருமால் 11 வடிவங்கள் எடுத்து அவர்களைச் சாந்தப்படுத்தினார். அந்த சிவரூபங்களை ஒன்றாக்கினார். பெருமாளின் அந்த 11 வடிவங்களுமே உபயகாவேரி மத்திமம் என்ற புராணப் பெயர் பெற்ற திருநாங்கூரில் எழுந்தருளினர். ஆண்டுதோறும் தை அமாவாசைக்கு மறுநாள் 11 திவ்யதேச பெருமாள்களும் கருட வாகனத்தில் திருநாங்கூரில் ஒன்று கூடுவர். இவர்களை திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் (பாடுதல்) செய்யும் வைபவம் சிறப்பாக நடக்கும். அதன் பின் மணவாள மாமுனிகள், திருமங்கையாழ்வாருக்கு மங்களாசாசனம் செய்யும் நிகழ்ச்சி நடக்கும். திருவண்புருஷோத்தமம் கோவிலுக்கு வருபவர்கள், மற்ற திவ்யதேசங்களையும் தரிசிக்க வாய்ப்பான தலம் இது.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
வீட்டில் இருந்தபடி வழிபட்டாலே பலன் கிடைக்கும். ... மேலும்
 
செய்த தவறை உணர்ந்து புனித தீர்த்தங்களில் நீராடி கோயில்களுக்கு செல்ல ... மேலும்
 
குழந்தைகளின் நலனில் அக்கறை கொண்டவர் பெற்றோர். மனப்பூர்வமாக அவர்கள் செய்யும் வேண்டுதலுக்கு சக்தி ... மேலும்
 
ரோமப்பேரரசர் ஒருவருக்கு பாக்தாத் நகரைக் கைப்பற்ற ஆசை. காரணம் அவ்வூர் செல்வச் செழிப்பு மிக்கது. ... மேலும்
 

நட்புக்காக... ஏப்ரல் 10,2026

நம்பிக்கை என்னும் அஸ்திவாரத்தின் மீது நட்பு என்ற கட்டடம் எழுப்பப்படுகிறது. அதில் நம்பிக்கை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar