Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பொறுமையாக இருப்பவன் சக்தியற்றவன் ... ஆறுபடை வீடுகள் ஏன்? ஆறுபடை வீடுகள் ஏன்?
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
ஒளிமயமான எதிர்காலம் உள்ளத்தில் தெரிகிறது!
எழுத்தின் அளவு:
ஒளிமயமான எதிர்காலம் உள்ளத்தில் தெரிகிறது!

பதிவு செய்த நாள்

29 ஆக
2016
02:08

விருத்தாச்சலம் – திட்டக்குடி சாலையில் 22 கி.மீ., துõரத்திலுள்ள திருவட்டத்துறையில்  அருள்புரியும் திரிபுரசுந்தரி சமேத தீர்த்தபுரீஸ்வரர் மீது நாவுக்கரசர் பாடிய தேவாரப் பாடல் இது. இதனைப் பக்தியுடன் படித்தால் எந்த பிரச்னையிலும் தெளிவான முடிவை எடுக்கலாம். ஒளிமயமான எதிர்காலம் பிறக்கும்.

கடவுளைக் கடலுள் எழும் நஞ்சுண்ட
உடலுளானை ஒப்பார் இலாத எம்
அடலுளானை அரத்துறை மேவிய
சுடருளானைக் கண்டீர் நாம் தொழுவதே

கரும்பு ஒப்பானைக் கரும்பினிற் கட்டியை
விரும்பு ஒப்பானை விண்ணோரும் அறிகிலா
அரும்பு ஒப்பானை அரத்துறை மேவிய
சுரும்பு ஒப்பானைக் கண்டீர் நாம்
தொழுவதே.

ஏறொப் பானை எல்லாவுயிர்க்கும் இறை
வேறொப் பானை விண்ணோரும் அறிகிலா
ஆறொப் பானை அரத்துறை மேவிய
ஊறொப் பானைக் கண்டீர் நாம் தொழுவதே.

பரப்பு ஒப்பானைப் பகலிருள் நன்னிலா
இரப்பு ஒப்பானை இளமதி சூடிய
அரப்பு ஒப்பானை அரத்துறை மேவிய
சுரப்பு ஒப்பானைக் கண்டீர் நாம் தொழுவதே

நெய்யொப் பானை நெய்யிற்சுடர் போல்
வதோர்
மெய்யொப் பானை விண்ணோரும்
அறிகிலார்
ஐயொப் பானை அரத்துறை மேவிய
கையொப் பானைக் கண்டீர் நாம் தொழுவதே

நெதியொப் பானை நெதியிற் கிழவனை
விதியொப் பானை விண்ணோரும் அறிகிலார்
அதியொப் பானை அரத்துறை மேவிய
கதியொப் பானைக் கண்டீர் நாம் தொழுவதே

புனலொப் பானைப் பொருந்தலம் தம்மையே
மினலொப் பானை விண்ணோரும் அறிகிலார்
அனலொப் பானை அரத்துறை மேவிய
கனலொப் பானைக் கண்டீர் நாம் தொழுவதே

பொன்னொப் பானைப் பொன்னறிசுடர்
போல்வதோர்
மின்னொப் பானை விண்ணோரும்
அணிகிலார்
அன்னொப் பானை அரத்துறை மேவிய
தன்னொப் பானைக் கண்டீர் நாம் தொழுவதே

காழி யானைக் கனவிடை யூருமெய்
வாழி யானை வல்லோரும்என்று இன்னவர்
ஆழி யான்பிர மற்கும் அரத்துறை
ஊழி யானைக் கண்டீர் நாம் தொழுவதே.

கலையொப் பானைக் கற்றார்க்கோர் அமுதினை
மலையொப் பானை மணிமுடி யூன்றிய
அலையொப் பானை அரத்துறை மேவிய
நிலையொப் பானைக் கண்டீர் நாம் தொழுவதே.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
மிக அழகானது - பழநி பெரிய ஆவுடையார் கோயில்தலை சாய்த்த கோலம் - திருவூறல், தக்கோலம் (வேலூர் மாவட்டம்)சிற்ப ... மேலும்
 
அரிதாக சில கோயில்களில் கால்களை மாற்றி மடக்கி வைத்தும், குத்துக்காலிட்ட நிலையிலும் காட்சி தரும் ... மேலும்
 
வலதுகை ஆட்காட்டி விரலின் நுனியும், கட்டைவிரலின் நுனியும் பொருந்தியிருக்க, நடுவிரல், மோதிரவிரல், ... மேலும்
 
தெட்சிணாமூர்த்தி யோகம், ஞானம் (மேதா), வீணா, வியாக்யான தெட்சிணாமூர்த்தி என நான்கு நிலைகளில் ... மேலும்
 
கலக்கத்தில் இருப்பவர்களுக்கு பலத்தைக் கொடுப்பவர் ராமர். அவரது திருவடியில் சரணடைந்த பக்தர்களைக் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar