அவலுார்பேட்டை: வளத்தி மங்களாம்பிகை சமேத மருதீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது. மேல்மலையனுார் தாலுகா வளத்தியில் மங்களாம்பிகை சமேத மருதீஸ்வரர் கோவிலில் ஆவணி மாத பிரதோஷத்தை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு பாலாபிேஷகமும், தீபாரதனையும் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில், மருதீஸ்வரர் அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.