Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மஞ்சகம்பை கோவிலில் அமாவாசை பூஜை 100 ஆண்டுகள் பழமையான விநாயகர் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி திருவிழா: செப்., 4 மற்றும் 7ம் தேதிகளில் போக்குவரத்து மாற்றம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 செப்
2016
11:09

சென்னை: பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி மாதா திருவிழாவை முன்னிட்டு, செப்., 4, 7 ஆகிய தேதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி மாதா திருவிழாவை முன்னிட்டு, 6-வது அவென்யு, 4-வது பிரதான சாலை, 2 மற்றும் 7வது அவென்யுக்களில் வாகனங்கள் நிறுத்த அனுமதி இல்லை. மாலை 4 மணி முதல் எம்.ஜி., சாலை 7-ஆவது அவென்யு சந்திப்பு, 6-வது அவென்யு, 4-வது பிரதான சாலை சந்திப்பு, 3-வது அவென்யு சந்திப்பிலிருந்து மாதா ஆலயத்தை நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை.

எங்கே நிறுத்தலாம்?:
அதேபோல், எல்.பி. சாலை, தாமோதரபுரத்திலிருந்தும், பெசன்ட் நகர் பேருந்து நிலையம் நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதி கிடையாது. 32, 33-ஆவது குறுக்குத் தெருக்களில் உள்ள மாநகராட்சி விளையாட்டுத் திடல்களில் வாகனங்களை நிறுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.பெசன்ட் நகர் 4-வது அவென்யு, கஸ்டம்ஸ் காலனி, 2-வது குறுக்குத் தெரு, 5-வது அவென்யு, ஊருர் குப்பம் சாலை, 32-வது குறுக்குத் தெரு, பெசன்ட் நகர், 17, 21 மற்றும் 24 முதல் 28-வது வரை உள்ள குறுக்குத் தெருக்கள், எலியட்ஸ் கடற்கரை, 6-ஆவது அவென்யுவில், கோஸி கார்னர் முதல், 5-வது அவென்யு சந்திப்பு வரை ஒரு புறமாக வாகனங்கள் நிறுத்தலாம். மாலை, 4:00 மணி முதல் மாநகர் பேருந்துகள் மட்டும் டாக்டர் முத்துலட்சுமி சாலையிலிருந்து, பெசன்ட் அவென்யு சாலைக்கு இடது புறம் திரும்ப அனுமதி இல்லை. பெசன்ட் அவென்யு சாலைக்கு செல்ல வேண்டிய மாநகர பேருந்துகள் அனைத்தும் எல்.பி.சாலை, எம்.ஜி.சாலை வழியாகச் செல்ல வேண்டும்.மாநகரப் பேருந்துகள், எம்.ஜி.சாலை, பெசன்ட் நகர், 1-வது பிரதான சாலை வழியாக பேருந்து நிலையத்தை அடைந்து, வெளியே செல்லும் வழியாக திருவான்மியூர் பகுதிக்குச் செல்லும் சாஸ்திரி நகர், 1-வது அவென்யு வழியாகவும் செல்லலாம்.

மாற்று வழியில்...:
  இரவு, 8:00 மணிக்கு மேல் எல்.பி.,சாலை ஒரு வழிப் பாதையாகப் பயன்படுத்தப்படும். அடையாறு பாலத்தில் இருந்து, திருவான்மியூர் சிக்னல் செல்லும் வாகனங்கள் எல்.பி. சாலை வழியாகச் செல்லலாம். திருவான்மியூர் சிக்னலில் இருந்து, எல்.பி.சாலையில் வரும் வாகனங்கள் எல்.பி.சாலை இந்திரா நகர், 3-வது அவென்யு சந்திப்பில் திருப்பி விடப்பட்டு இந்திரா நகர் 3-வது அவென்யு, கஸ்துாரிபாய் நகர், 3-வது குறுக்குத் தெரு வழியாக படேல் சாலையைச் சென்றடையலாம். படேல் சாலையில் இருந்து கஸ்துாரிபாய் சாலை, 3-வது குறுக்குத் தெரு செல்வது தடை செய்யப்படுகிறது. அந்த வழியாக வரும் வாகனங்கள் எல்.பி., சாலை வழியாக கஸ்துாரிபாய் நகர் செல்லலாம்.இவ்வாறு போக்குவரத்து போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்,  காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அத்திவரதர் குளத்தில் ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் இன்று பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.திருத்தணி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் மாசி பிரம்மோத்சவ விழா, இன்று காலை கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
தூத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி திருவிழா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ... மேலும்
 
temple news
திருவொற்றியூர்; தியாகராஜ சுவாமி கோவிலில், மாசி பிரமோத்சவ பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar