கும்பகோணத்திற்கு அருகிலுள்ள பாபநாசம் நகராட்சி மையப் பகுதியில் தாமோதர விநாயகர் கோயில் அமைந்துள்ளது. லட்சுமி வடமேற்கு மூலையில் வாசம் செய்வதாக ஐதிகம் இருப்பதால் அத்திசையிலேயே கோயிலைக் கட்டியுள்ளனர். விநாயகரின் அருளுடன் லட்சுமி கடாட்சமும் சேர்ந்து கிடைப்பதால் இவரை இரட்டைப் பலன் தரும் பிள்ளையார் என்கிறார்கள்.