அவலுார்பேட்டை: கப்ளாம்பாடி கோவிலில் 1008 திருவிளக்கு பூஜை நடந்தது. மேல்மலையனுார் தாலுகா கப்ளாம்பாடி வீரவாழி அம்மன் கோவிலில் சுமங்கலி பூஜை நடந்தது. இதை முன்னிட்டு கோவில் வளாகத்தில் 1008 திருவிளக்குகளை ஏற்றி வைத்து சிறப்பு பூஜை நடந்தது. முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பூஜையில் திரளாக கிராம மக்கள் கலந்து கொண்டனர்.