சேதுபதி மன்னர்கள் 14ம் நுõற்றாண்டில் ராமநாதபுரம் நகரத்தை நிர்மாணித்த போது, அரண்மனை கோட்டைக்கு வெளியே மேற்கு திசையின் காவல் தெய்வமாக கூரி சாத்த அய்யனார் கோயில் அமைக்கப்பட்டது. அப்போதைய சேதுபதி மன்னரான உடையப்ப சேதுபதி மன்னரின் கனவில் தோன்றி மேற்கு திசையில் கோயில் அமைக்க கூறியதால், ஆரம்பத்தில் கூறி சார்ந்த அய்யனார் என்ற பெயர், கூரி சாத்த அய்யனாராக மாறியது. பொதுவாக அய்யனார் கோயில்கள் கிழக்கு நோக்கியே அமைந்திருக்கும். ராமநாதபுரத்தில் இந்த அய்யனார் மட்டும் மேற்கு திசை நோக்கி அமர்ந்திருப்பது சிறப்பம்சம். இதனால் இந்த அய்யனார் அதிக சக்தி பெற்ற காவல் தெய்வமாக விளங்குகிறார்.
கேட்டவருக்கு கேட்ட வரம் தரும் தெய்வமாகவும், நோய்களை தீர்ப்பவராகவும் விளங்குகிறார். 1956 முதல் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அறங்காவல ராக பி.ஹரிகரன், அவருக்கு பின் மகன் எச்.ஹரிச்சந்திரன் பொறுப்பு வகித்து வருகிறார். கடந்த 1986ல் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அதன் பிறகு 2004ல் கும்பாபிஷேகம் நடந்தது. மூன்றாவது முறையாக 2016 பிப்ரவரியில் ராஜ கோபுரம் அமைத்து கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இந்த கோயிலில் மாசி சிவராத்திரி, ஆவணி மாதம் புரவி எடுப்பு விழா விமரிசையாக நடக்கிறது. நித்ய பூஜைகளை தெய்வேந்திரநல்லுõர், ஒரத்துõர் கிராமத்தை சேர்ந்த குலாளர் சமூகத்தினர் செய்து வருகின்றனர். வேறு எந்த அய்யனார் கோயிலிலும் இல்லாத சிறப்பம்சமாக யானை, குதிரை பரிவாரங்களுடன் அய்யனார் அருள்பாலிக்கிறார். ராமநாதபுரம் மற்றும் சுற்றுவட்டார மக்களின் குல தெய்வமாக இந்த கூரி சாத்த அய்யனார் அருள்பாலிக்கிறார்.