பதிவு செய்த நாள்
24
செப்
2016
12:09
ஆத்தூர்: கைலாசநாதர் கோவிலில், பிரித்தியங்கிராதேவிக்கு, சிறப்பு பூஜை நடந்தது. ஆத்தூர், கைலாசநாதர் கோவிலில், தேய்பிறை அஷ்டமியொட்டி, காலை, 11:00 மணியளவில், உலக நன்மை வேண்டி, யாக குண்டத்தில், மூலிகை கொட்டி, சிறப்பு பூஜை நடந்தது. மதியம், 1:30 மணியளவில், பிரித்தியங்கிரா தேவி அம்மன் மற்றும் சொர்ண பைரவர், வெள்ளி கவசம், புஷ்ப அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில், ஆத்தூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த, ஏராளமான பக்தர்கள், வழிபாடு செய்தனர். அதேபோல், ஆறகளூர், காமநாதீஸ்வரர் கோவிலில், உன்மத்தர், ருருவர், குரோதனர், சண்டர், பீஷ்ணர், காலசம்ஹாரர், கால பைரவர் உள்பட, எட்டு பைரவர் சிலைகளுக்கு, அபிஷேக பூஜை நடந்தது. கால பைரவர், வெள்ளி கவச சிறப்பு அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், சேலம், விழுப்புரம், ஈரோடு, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து, ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். மேலும், ஆத்தூர், கோட்டை காயநிர்மலேஸ்வரர், தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர் உள்ளிட்ட கோவில்களில், தேய்பிறை அஷ்டமியொட்டி, கால பைரவருக்கு சிறப்பு பூஜை நடந்தது.