Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஆற்காடு அருகே அம்மன் கோவிலில் இடி ... ராஜகோபால சுவாமிக்கு நாளை திருமலை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பசுமை மாறாமல் திருவண்ணாமலை கிரிவலப்பாதை விரிவாக்க பணி: பொதுமக்கள் வலியுறுத்தல்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 செப்
2016
12:09

திருவண்ணாமலை: பசுமை மாறாமல் கிரிவலப்பாதையை அகலப்படுத்த வேண்டும் என, கருத்து கேட்பு கூட்டத்தில் பொதுமக்கள் வலியுறுத்தினர். திருவண்ணாமலையில், கிரிவலப்பாதையை விரிவாக்கம் செய்ய, 64 கோடி ரூபாய், தமிழக அரசு ஒதுக்கியது. இதையடுத்து விரிவாக்க பணிகள் நடந்து வந்தன. இதில் மரங்கள் வெட்டப்படுவதாக வந்த புகாரை அடுத்து, பசுமை தீர்ப்பாயம் தானாக முன்வந்து, வழக்கை எடுத்து, பணியை தற்காலிகமாக நிறுத்த உத்தரவிட்டது, பின், இதுகுறித்து ஆய்வு செய்ய குழு அமைக்க, அரசுக்கு உத்தரவிட்டது. அதன்படி, ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சம்பத்குமார், ஓய்வு பெற்ற முதன்மை வன பாதுகாப்பு அலுவலர் சேகர் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது, நேற்று முன்தினம் கிரிவலப்பாதை முழுவதையும் இவர்கள் ஆய்வு செய்தனர். இதையடுத்து, சாலை விரிவாக்கத்தின்போது, மரம் வெட்டுவது குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்கும் கூட்டம், நேற்று திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதில் இந்த குழுவை சேர்ந்தவர்கள், கலெக்டர் பிரசாந்த் மு. வடநேரே, எஸ்.பி., பொன்னி மற்றும் பொதுமக்கள், 250 பேர் பங்கேற்றனர்.

அப்போது பொதுமக்கள் கூறியதாவது: சாலை விரிவாக்கம் அவசியம், ஆனால், பசுமை மாறக்கூடாது. மரங்களை வெட்டாமல், நடை பாதை அமைக்க வேண்டும்; தார் சாலை கூடாது; கிரிவலப்பாதையில் பக்தர்களுக்கு இடையூறாக வாகனங்கள் செல்ல அனுமதிக்க கூடாது; கழிவு நீர் கால்வாய் புதிதாக அமைக்க கூடாது, மலையின் உட்புறமாக சாலை விரிவாக்கம் கூடாது. பவுர்ணமி நாளில் அடி அண்ணாமலை, அண்ணா நுழைவு வாயில் உள்ளிட்ட முக்கிய இடங்களில், மருத்துவ குழு அடங்கிய முகாம் அமைக்க வேண்டும் . இவ்வாறு கருத்துக்களை தெரிவித்தனர். தொண்டு நிறுவனத்தை சேர்ந்த சிலர் மட்டும், திட்டத்தை கைவிட வேண்டும் என்று கூறினர். கருத்து கேட்பு கூட்டம் முடிந்த பிறகு, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சம்பத்குமார் நிருபர்களிடம் கூறியதாவது: இதில் நான் எந்த முடிவும் எடுக்க முடியாது, கிரிவலப்பாதை குறித்த ஆய்வு அறிக்கை மற்றும் பொதுமக்களிடம் கேட்கப்பட்ட கருத்துகளின் அறிக்கையை, பசுமை தீர்ப்பாயத்திடம் அளிக்கப்படும். இறுதி முடிவு பசுமை தீர்ப்பாயம் எடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
துாத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாளை மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வண்ண ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சிருங்கேரி ஜகத்குரு விதுசேகர பாரதீ சுவாமிகள் 2 மணி நேரம் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் நடக்கும் ... மேலும்
 
temple news
கமுதி; கமுதி அருகே ஆதிவராஹி அம்மன் கோயிலில் உள்ள யோக நரசிம்மருக்கு சுதர்சன ஜெயந்தி ஆனி மாத சுவாதி ... மேலும்
 
temple news
நிலக்கோட்டை;திருச்செந்துார் முருகன் கோயில் கும்பாபிஷேகத்திற்காக திண்டுக்கல்மாவட்டம் நிலக்கோட்டை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar