அகத்திய சன்மார்க் சங்கம் சார்பில் திருவிளக்கு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30செப் 2016 12:09
புதுச்சேரி: அகத்திய சன்மார்க் சங்கம் சார்பில், முத்தியால்பேட்டை சுபலட்சுமி மகாலில் நாளை (1ம் தேதி) 1008 திருவிளக்கு பூஜை நடக்கிறது. ஆறுமுக அரங்க மகா தேசிய சுவாமிகளால் அகத்திய சன்மார்க்க சங்கம் நிறுவப்பட்டு, சேவை பணிகள் மற்றும் ஆன்மிக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சங்கத்தின் புதுச்சேரி கிளை சார்பில், முத்தியால்பேட்டை சுபலட்சுமி மகாலில், நாளை (1ம் தேதி) ௧008 திருவிளக்கு பூஜை நடக்கிறது. உலக நன்மை மற்றும் மக்கள் நலன் வேண்டி, காலை 8:00 மணி முதல் 1:00 வரையில் பூஜை நடக்கிறது. ஆறுமுக அரங்க மகா தேசிய சுவாமிகள், விளக்கு பூஜையை துவக்கி வைக்கிறார். பூஜையில் பங்கேற்கும் பெண்கள் விளக்கு மட்டும் கொண்டு வர வேண்டும்.