Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பரமக்குடி கோவிலில் நவராத்திரி கொலு ... காந்தி கோவிலில் சிறப்பு பூஜை காந்தி கோவிலில் சிறப்பு பூஜை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவை கோவில்களில் கொலு பூஜை கோலாகலம்: பக்தர்கள் சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
கோவை கோவில்களில் கொலு பூஜை கோலாகலம்: பக்தர்கள் சிறப்பு வழிபாடு

பதிவு செய்த நாள்

03 அக்
2016
12:10

கோவை : நவராத்திரியை ஒட்டி, பல்வேறு கோவில்களில் நடந்த, கொலு பூஜையில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைத்து கோவில்களிலும், நவராத்திரி சிறப்பாக, பகலில் சிவபூஜையும், இரவில் அம்பிகை பூஜையும் நடக்கின்றன. கோவில் வளாகத்தில், ஒன்பது படிகள் அமைத்து, கொலு வைத்து, பாடல்கள் பாடி பக்தர்கள் பரவசமடைந்தனர். பொதுவாக கொலுவில், ஓரறிவு முதல், ஆறறிவு கொண்ட உயிர்களை, முதல் ஆறு படிகளில், பொம்மைகளாக அடுக்கி வைப்பர். பின், ஏழாம் படியில், மனிதனின் அறிவுக்கு மேம்பட்ட, மகரிஷிகளின் பொம்மைகள், எட்டாம் படியில், தேவர்கள், பஞ்சபூதங்கள், அஷ்டதிக் பாலகர் பொம்மைகளும் இடம்பெறும். ஒன்பதாம் படியில், உலகை படைத்து, உயிர்களை காக்கும், அனைத்து செயல்பாடுகளுக்கும் மூல காரணமான, பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகள், அவர்தம் தேவியர்களான, சரஸ்வதி, லட்சுமி, பார்வதி, ஆதிபராசக்தி ஆகியோரின், திருவுருவ பொம்மைகள் இடம்பெற்றன. கொலு வைப்பதன் மூலம், மனித பிறப்புக்கான அர்த்தம், இறைவனின் காக்கும் செயல் பாடுகளை அறியலாம். கோவில்களில் வாசம் செய்யும் இறைவன், வீட்டிலும் எழுந்தருளி காக்கவே, வீட்டில் கொலு வைக்கப்படுகிறது.

* வெள்ளலுார், ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில், அலங்கார பூஜையுடன், கொலு வழிபாடு துவங்கியது. ஈச்சனாரி, மகாலட்சுமி மந்திர் கோவிலில் நடந்த, நவராத்திரி சிறப்பு வழிபாட்டில், பக்தர்கள் கலந்து கொண்டு, அம்பாளை தரிசனம் செய்தனர்.

* சித்தாபுதுார், ஐயப்பன் கோவிலில், அதிகாலையில் அஷ்டாபிஷேகத்தோடு, வழிபாடுகள் துவங்கின. கோவில் வளாகத்தில் வைத்த கொலுவில், பஜனை பாடல்களுடன், கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன.

* சலீவன் விதி, வேணு கோபால சுவாமி திருக்கோவிலில், பரமபதநாதன் அலங்காரத்தில், இறைவன் அருள்பாலித்தார். நவராத்திரி பூஜையில், கலந்து கொண்ட பக்தர்களுக்கு, மங்கல பொருட்கள் பிரசாதமாக வழங்கப்பட்டன.

* குறிச்சி, வடிவாம்பிகை சமேத வாலீஸ்வரர் கோவிலில், அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. கொலு வழிபாட்டில், துர்க்கை அலங்காரத்தில்,அம்பாள் அருள்பாலித்தார்.

* சின்னியம்பாளையம், குருவிநாயகர் கோவில், கே.கே.புதுார், ஞான ஈஸ்வரி அம்பாள் சமேத ஞான ஈஸ்வரர் கோவிலில், அலங்கார பூஜையுடன், கொலு வழிபாடுகள் துவங்கின. அன்னபூரணி அலங்காரத்தில் அருள்பாலித்த, அம்பாளை நோக்கி, பக்தர்கள் தங்கள் கோரிக்கைகளை வேண்டி வணங்கினர்.

* தடாகம் ரோடு, திரி நேத்ர தசபுஜ வக்ர காளியம்மன் கோவில், ஆர்.எஸ்.புரம், அன்னபூர்ணேஸ்வரி, யோக நரசிம்மர் சன்னதியில், சுயம்வர பார்வதி ஹோமம் மற்றும் சண்டி ஹோமத்தோடு வழிபாடுகள் துவங்கின.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; வயலூர் முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா நான்காம் நாள் -சண்முக அர்ச்சனை சிங்காரவேலர் ... மேலும்
 
temple news
ஒரகடம்; வல்லக்கோட்டை முருகன் கோவிலில், கந்த சஷ்டி சூரசம்ஹாரம் 27ம் தேதி நடைபெற உள்ளது.ஒரகடம் அடுத்த, ... மேலும்
 
temple news
இன்று நாகசதுர்த்தி நாளில் நாகர்சிலைக்கு பாலபிஷேகம் செய்து வழிபடுவர். புற்றுக்கு பால் ஊற்றுவர். ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில், 108 மாணவியர் கந்தசஷ்டி பாராயணம் ... மேலும்
 
temple news
ஸ்ரீசத்ய சாய் பாபாவின், 100வது பிறந்த நாளை முன்னிட்டு, அனைவரையும் நேசி; அனைவருக்கும் சேவை செய் என்ற ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar