பழநி : பழநி மலைக்கோயில் உண்டியலில் 24 நாட்களில் ரூ. ஒரு கோடியே 75 லட்சத்து 78 ஆயிரம் வசூலாகியுள்ளது. பழநி மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில் உண்டியல் எண்ணிக்கை நடந்தது. தங்கம் 715 கிராம், வெள்ளி 10,700 கிராம், வெளிநாட்டு கரன்சி 1481 மற்றும் ரொக்கமாக ரூ. ஒரு கோடியே 75 லட்சத்து 78 ஆயிரத்து 213 கிடைத்துள்ளது. தங்கம் மற்றும் வெள்ளியில் பாதம், வேல், தாலி, உருவம், சுவாமிசிலைகள் உள்ளிட்டவற்றை காணிக்கையாக செலுத்தி இருந்தனர். இணை ஆணையர் ராஜமாணிக்கம், துணை ஆணையர்(பொ)மேனகா, திண்டுக்கல் உதவி ஆணையர் சிவலிங்கம் பங்கேற்றனர்.