தரிசனத்திற்கு பின் விஷ்ணு கோயிலில் உட்காராமல் வீட்டிற்கும் செல்ல வேண்டும் என்பது ஏன்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05அக் 2016 05:10
சிவன் கோயிலுக்கு சென்று தரிசித்தபின் சிறிது நேரம் அமர்ந்துவர வேண்டும். விஷ்ணு கோயிலுக்கு சென்று தரிசித்தபின் நேராக வீட்டிற்கு வந்துவிட வேண்டும் என்று ஏன் கூறுகிறார்கள் தெரியுமா? சிவன் கோயிலுக்கு சென்று தரிசனம் முடித்துவிட்டு, வீடு திரும்பும் போது வழியில் ஏதேனும் இடையூறு ஏற்படாமல் இருக்க பூதகணங்களை நம்மோடு துணைக்கு அனுப்புகிறார் சிவன். அதனால் நாமும் சிறிதுநேரம் உட்கார்ந்து இறைவனிடத்தில் மகிழ்ச்சியை தெரிவித்து விட்டு கிளம்புகிறோம். விஷ்ணு கோயிலில் தரிசித்து விட்டு வரும் போது மகாலட்சுமி நம்மோடு வீட்டிற்கு வருகிறாள். அதனால் உட்காராமலும் வேறெங்கும் செல்லாமலும் வீட்டிற்கு நேராக வர வேண்டும் என்று கூறுகின்றனர்.