* இடையூறு வந்தாலும் குறிக்கோளை அடைவதில் உறுதியாக இரு. * வீட்டு வழிபாட்டால் குடும்பமும், கோயில் வழிபாட்டால் ஊரும் செழிக்கும். * வாக்கு கொடுப்பது எளிது. ஆனால் நிறைவேற்றுவது கடினம். * தீமை எனத் தெரிந்த பின்னும், நல்வழியில் செல்லாமல் இருப்பது அறிவீனம். * அன்பால் பகை அழியும். இன்பம் உண்டாகும். * எல்லா உயிர்களையும் நேசி. மனதில் அமைதி இருக்கும். * பயம், சந்தேகம், சோம்பல் ஒழிந்தால் நல்ல காலம் பிறக்கும். * கடவுளை சரணடைந்தால் வலிமை, அழகு, மகிழ்ச்சி உண்டாகும். * தியானத்தின் மூலம் விரும்பியதை அடைய முடியும். * மனதில் எப்போதும் நல்ல எண்ணம் வளர வேண்டும். * காலத்தை வீணாக்கினால் அதற்குரிய பலன் கிடைக்காது. * பேச்சு, செயலில் முரண்படும் மனிதரிடம் உறவாடாதே. * எங்கும், எப்போதும், எதிலும் நேர்மையைப் பின்பற்று. * உண்மையை பேசு. அது உன்னை பாதுகாக்கும். * பிறரை ஏமாற்றாதே; அதைப் போல் நீயும் ஏமாறாதே. * தன்னுள் உலகத்தையும், உலகத்திடம் தன்னையும் காண்பவன் ஞானி.