Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news முதனை முதுகுன்றீஸ்வரர் கோவிலில் ... வேலங்குடி பெரியநாயகி அம்மன் கோயில் நவராத்திரி விழா வேலங்குடி பெரியநாயகி அம்மன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விஸ்வேஸ்வரசுவாமி கோவிலில் மழை நீர்: நிர்வாகம் அலட்சியம்
எழுத்தின் அளவு:
விஸ்வேஸ்வரசுவாமி கோவிலில் மழை நீர்: நிர்வாகம் அலட்சியம்

பதிவு செய்த நாள்

14 அக்
2016
12:10

திருப்பூர்: திருப்பூரில் நேற்று மாலை, 4:30 மணியளவில், இடி, மின்னலுடன் கனமழை துவங்கி, ஒன்றரை மணி நேரம் வரை பெய்தது.இதனால், பிரதான ரோடுகள், ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நகரின் மத்தியில் உள்ள, விஸ்வேஸ்வரசுவாமி கோவிலுக்குள், மழைநீர் புகுந்தது. கோவிலை சுற்றிலும் உள்ள ரோடுகளில், மழை நீருடன், சாக்கடை கழிவும் சேர்ந்து, கோவில் வெளி பிரகாரம் முழுவதும் சூழ்ந்தது. நேற்று பிரதோஷம் என்பதால், வழக்கமாக நடக்கும் சிறப்பு பூஜைக்காக, நூற்றுக்கணக்கான பக்தர்கள் கோவிலில் இருந்தனர். திடீரென மழைநீரும், கழிவு நீரும் கோவிலுக்குள் வந்ததால், பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர்.ஒதுங்கக்கூட இடமின்றி, பலரும் அவதிக்குள்ளாகினர். நந்தியை சுற்றிலும் மழைநீர் சூழ்ந்ததால், பிரதோஷ சிறப்பு பூஜை, வழிபாடுகள் தடைபட்டன. பிரதான ரோட்டில் வரும் மழை நீர், கோவிலுக்குள் நுழையும் வாய்ப்பு இருப்பதை அறிந்தும், ராஜகோபுரம், தெற்கு கோபுரம் உள்ளிட்ட பகுதிகளில், கோவில் நிர்வாகம், எவ்வித முன்னேற்பாடும் செய்யவில்லை. அதேபோல், கோவிலுக்குள் விழும் மழை நீர் வெளியேறும் கட்டமைப்பில் உள்ள அடைப்புகளை கூட, அறநிலையத்துறை அதிகாரிகள் கண்டு கொள்ளாததே, இந்த அவதிக்கு காரணமாக அமைந்தது. மழை நின்ற பிறகும் கூட, தண்ணீரை வெளியேற்ற, உரிய நடவடிக்கை எடுக்காததால், கோவில் வளாகம் முழுவதும், சேறும், சகதியுமாக மாறியது. இது, பக்தர்களை வேதனையடைய செய்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு இரவு நேர ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ... மேலும்
 
temple news
கடலுார்: முத்தாலம்மன் கோவில் தேர் திருவிழா கோலாகலமாக நடந்தது.கடலுார், திருப்பாதிரிப்புலியூர் ... மேலும்
 
temple news
கோவை; மாசி மாத பிறப்பு மற்றும் ஏகாதசி தினத்தை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி ... மேலும்
 
temple news
கொடைக்கானல்; கொடைக்கானல் பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயிலில் அரோகரா கோஷத்துடன் தைப்பூச தேரோட்டம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar