Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சரநாராயண பெருமாள் கோவிலில் ஏக தின ... ஸ்ரீனிவாசா திருக்கல்யாணம்: பாலக்காட்டில் கோலாகலம் ஸ்ரீனிவாசா திருக்கல்யாணம்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநியில் சுவாமி தரிசனம்: 5 மணி நேரம் காத்திருப்பு
எழுத்தின் அளவு:
பழநியில் சுவாமி தரிசனம்: 5 மணி நேரம் காத்திருப்பு

பதிவு செய்த நாள்

17 அக்
2016
11:10

பழநி: பழநியில், சுவாமி தரிசனத்திற்காக, ஐந்து மணி நேரம் பக்தர்கள் காத்திருந்தனர். தமிழகத்தில், பழநி மலைக்கோவிலில் மட்டுமே, ரோப் கார், வின்ச்கள் இயக்கப்படுகின்றன. ஆண்டு பராமரிப்பு பணிக்காக, ரோப் கார் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. ஞாயிறு விடுமுறை தினமான நேற்று, கோவிலில் குவிந்த பக்தர்கள், வின்ச்களில் அதிகளவு பயணம் செய்தனர்.இதனால், வின்ச் நிலைங்களில் நீண்ட வரிசை காணப்பட்டது. மூன்று மணி நேரம் காத்திருந்து, பக்தர்கள் மலைக்கு சென்றனர். அங்கு, பொது தரிசன வழியில், இரண்டு மணி நேரம் காத்திருந்து, மூலவர் ஞான தண்டாயுதபாணியை தரிசனம் செய்தனர்.

முடி கட்டணம் அதிகரிப்பு: பழநி மலை கோவிலில், தினமும் நுாற்றுக்கணக்கான பக்தர்கள், முடி காணிக்கை செலுத்துகின்றனர். இங்கு கட்டணமாக, 10 வசூலிக்கப்பட்டு, நாவிதர்களுக்கு, ஐந்து ரூபாய் வழங்கப்படுகிறது.ஆயினும், அவர்கள், பக்தர்களிடம், தலா, 50 முதல், 100 வரை வசூலிக்கின்றனர். இது தொடர்பாக புகார்கள் வந்ததால், முடி காணிக்கை கட்டணம், 30 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதில், நாவிதர் பங்கு, 25 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த உயர்வு, இன்று முதல் அமலுக்கு வருகிறது. கோவில் அதிகாரி ஒருவர் கூறுகையில், பக்தர்களிடம் கூடுதல் பணம் வசூலிக்கும் புகாரை தவிர்ப்பதற்காக, 30 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு மேல், கூடுதலாக வசூல் செய்தால், பக்தர்கள் எழுத்துப்பூர்வமாக புகார் தெரிவித்தால், நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று நடந்த மயானக்கொள்ளை நிகழ்ச்சியில் தமிழகம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; தஞ்சாவூர் பெரிய கோவில் உள்ளிட்ட  சிவாலயங்களில் மகாசிவராத்திரி விழா நடைபெற்றது. ... மேலும்
 
temple news
அன்னூர்; மகா சிவராத்திரியை முன்னிட்டு, அன்னூர், மன்னீஸ்வரர் கோயிலில் பல ஆயிரம் பக்தர்கள் திரண்டனர். ... மேலும்
 
temple news
கோவை: ‘‘சனாதன தர்மம் என்பது பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு உயிரினத்துக்குமான வாழ்க்கை நெறிமுறை,’’ என, ... மேலும்
 
temple news
உடுமலை: திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில் மூலவர் கோபுரமாக திருச்சப்பரம் நேற்று நிறுவப்பட்டது; ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar