பதிவு செய்த நாள்
20
அக்
2016
12:10
திருவள்ளூர்: சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, விநாயகர் கோவில்களில், நேற்று, சங்கட நிவாரண அபிஷேகம் மற்றும் ஹோமம் நடந்தது. சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, திருவள்ளூர், ஜெயாநகர் விஸ்தரிப்பில் உள்ள வல்லப கணபதி கோவிலில், நேற்று மாலை, 5:00 மணிக்கு, கணபதி ஹோமம் நடந்தது. இரவு, பிரார்த்தனை தேங்காய் கட்டுதல் நிகழ்ச்சியும், மகா தீபாராதனையும் நடந்தது. திருவள்ளூர், தீர்த்தீஸ்வரர் கோவிலில் உள்ள விநாயகர் சன்னிதி, திருப்பாச்சூர் தங்காதலி அம்மன் உடனுறை வாசீஸ்வரர் கோவிலில் உள்ள, 11 விநாயகர்கள் கொண்ட விநாயகர் சபை, ஆயில் பேருந்து நிறுத்தத்தில் உள்ள வெற்றி விநாயகர் கோவில்களில் சங்கட நிவாரண பூஜை நடந்தது. பூங்கா நகர் சிவ - விஷ்ணு கோவிலில் உள்ள செல்வ விநாயகர், விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்ச நேயர் கோவில் எதிரில் உள்ள காரிய சித்தி விநாயகர் கோவில் ஆகிய கோவில்களிலும், சங்கட நிவாரண பூஜை நடந்தது. சோழவரம், பஞ்சேஷ்டியை அடுத்த, நத்தம் கிராமத்தில் (இகணபாக்கம்) ஆனந்தவல்லி சமேத வாலீஸ்வரர் கோவிலில், காரிய சித்தி கணபதி சன்னிதியில், நேற்று சகஸ்ரநாம அர்ச்சனை நடந்தது. தொடர்ந்து, விசேஷ அபிஷேகம், சிறப்பு அலங்காரம் மற்றும் சங்கட நிவாரண ஹோமம், மகா தீபாராதனை நடந்தது.