Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இரண்டாயிரம் கோயில்களில் முளைப்பாரி ... கடல் கடந்து வெற்றி கண்ட தமிழன் ராஜேந்திரன் மட்டுமே! கடல் கடந்து வெற்றி கண்ட தமிழன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
2 ஆயிரம் ஆண்டு கலை, வரலாறு உடையது மதுரை!
எழுத்தின் அளவு:
2 ஆயிரம் ஆண்டு கலை, வரலாறு உடையது மதுரை!

பதிவு செய்த நாள்

21 அக்
2016
11:10

நாகமலை: புதுக்கோட்டை மதுரை 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கலை வரலாறு உடையது, என பாண்டிய நாடு வரலாற்று ஆய்வு மைய செயலாளர் சாந்தலிங்கம் பேசினார். மதுரை காமராஜ் பல்கலை கலை வரலாற்றுத்துறை சார்பில் ஆர்ட் இன் மதுரை என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது. இளைஞர் நலத்துறை புலத்தலைவர் வேளாங்கண்ணி ஜோசப் வரவேற்றார்.

சாந்தலிங்கம் பேசியதாவது: மதுரை 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கலை வரலாறு உடையது. புறநானுாறு மதுரையை கலை நகரம் என்று குறிப்பிடுகிறது. படிப்பறிவு இல்லாத காலங்களில் சிற்பங்கள், ஓவியங்கள் மூலம் தமது எண்ணங்களை மக்களோடு பகிர்ந்து கொண்டனர்.கீழவளவு, அரிட்டாபட்டி, சமணர் மலை, கொங்கர் புளியங்குளம் சமணர் படுகைகள், மகாவீரர் உட்பட பல்வேறு சிற்பங்கள், தமிழ் பிராமி கல்வெட்டுக்கள், தமிழ் வட்டெழுத்துக்கள் ஆகியவை மதுரையின் கலை வரலாற்றை தெரிவிக்கின்றன.

சங்க காலத்தில் மதுரை, பூம்புகாரில் ஏராளமான கோயில்கள் இருந்ததாக மதுரை காஞ்சி கூறுகிறது. செங்கல் கட்டுமான கோயில்களான அவை காலத்தால் அழிந்து விட்டன. 8ம் நுாற்றாண்டில் காலத்தால் அழியாத குடவரை கோயில்கள் தோன்றின. அவற்றில் இடவசதி போதுமானதாக இல்லை. களப்பிரர்கள் காலத்திற்கு பின்பு பல்லவர், பாண்டியர்கள் காலத்தில் கற்களால் கோயில் கட்ட முடியும் என்று அறிந்தனர். அதன் பிறகே தமிழகத்திற்கு நிரந்தர கலை வடிவம் கிடைத்தது. தென் தமிழகத்தில் நடு கற்களையே வழிபட்டு வந்தனர். அவற்றுக்கு ஆடுகளை பலி கொடுத்தனர். உருவ வழிபாடு இல்லை. மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் 9ம் நுாற்றாண்டில் கட்டப்பட்டது. அதன் வெளி பிரகாரங்கள் பின்னர் கட்டப்பட்டவை. மன்னர் திருமலை நாயக்கர் மகால் இந்து, இஸ்லாம், ஜெர்மன் கூட்டு கலை வடிவத்தில் உள்ளது. இவ்வாறு பேசினார். ஒருங்கிணைப்பாளர் பாபு நன்றி கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுடில்லியில், விஜய யாத்திரை மேற்கொண்டுள்ள சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர பாரதீ சுவாமி, கடந்த, 14ம் ... மேலும்
 
temple news
 பாலக்காடு: கேரள மாநிலம், குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் செம்பை சங்கீத உற்சவம் இன்று ... மேலும்
 
temple news
மயிலாடுதுறையில் நாளை நடைபெற உள்ள கடை முக தீர்த்தவாரி பாதுகாப்புக்கு 280 போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், ஓதுவார் பயிற்சி பள்ளியை துவக்கி வைத்த அமைச்சர் சேகர்பாபு, மூன்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு புதிதாக செய்யப்பட்டுள்ள தங்கத்தேரின் வெள்ளோட்டம், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar