கிருஷ்ணராயபுரம்: லாலாப்பேட்டை மேலவிட்டுகட்டி விநாயகர் கோவிலில், நேற்றுமுன்தினம் இரவு சங்கடஹர சதுர்த்தி விழா நடந்தது. கிருஷ்ணராயபுரம் தாலுகா, சிந்தலவாடி பஞ்சாயத்து, மேலவிட்டுகட்டி பகுதியில் விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில், சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகருக்கு, பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. சிறப்பு அலங்காரத்தில், சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இவ்விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.