பதிவு செய்த நாள்
27
அக்
2016
11:10
திண்டிவனம்: முதல்வர் ஜெ.,பூரண நலம் பெற வேண்டி, திண்டிவனம் திந்திரிணீஸ்வரர் கோவிலில், நவகலச பூஜை நடந்தது. திண்டிவனத்திலுள்ள திந்திரிணீஸ்வரர் கோவிலில், சட்டத்துறை அமைச்சர் சண்முகம் தலைமையில், முதல்வர் ஜெ., நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டி, நவகலச சிறப்பு பூஜைகள் நடந்தது. இதையொட்டி, ராதாகுருக்கள் தலைமையில் வசந்தபுரம் மணிகண்ட சாஸ்திரி உள்ளிட்ட வேத விற்பன்னர்கள், கணபதி ஹோமம், ஆயுஷ் ஹோமம், மிருத்யூஜெய ஹோமம், நவக்கிரக ஹோமம், பைரவ ஹோமம், தன்வந்திரி ஹோமம் ஆகியன நடந்தது. தொடர்ந்து, திந்திரிணீஸ்வரருக்கு ருத்திரா அபிஷேகம் நடந்தது. நிகழ்ச்சியில், விழுப்புரம் எம்.பி.,ராஜேந்திரன், நகர செயலாளர் தீனதயா ளன், முன்னாள் நகர்மன்ற தலைவர் வெங்கடேசன், முன்னாள் எம்.எல்.ஏ.,அரிதாஸ், முன் னாள் நகர் மன்ற துணைத்தலைவர்கள் ஷெரீப், சாவித்திரி, நகர கூட்டுறவு வங்கி தலைவர் சேகர், எம்.ஜி.ஆர். இளைஞரணி ஜின்ராஜ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துக் கொண்டனர்.