பதிவு செய்த நாள்
27
அக்
2016
05:10
உளுந்துார்பேட்டை: திருவெண்ணெய்நல்லுார் ஸ்ரீகிருபாபுரீஸ்வரர் கோவிலில் முதல்வர் ஜெ., பூர்ண குணமடைய வேண்டி ஜெ.,பேரவை விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் ஞானமூர்த்தி தலைமையில் சிறப்பு பூஜை வழிபாடு நடந்தது. விழுப்புரம் தெற்கு மாவட்ட ஜெ., பேரவை சார்பில் முதல்வர் ஜெ., பூர்ணகுணமடைய வேண்டி திருவெண்ணெய்நல்லுார் மங்களாம்பிகை சமேத கிருபாபுரீஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை வழிபாடு நடந்தது. பேரவை மாவட்ட செயலாளர் ஞானமூர்த்தி தலைமையில் பேரவை நிர்வாகிகள் சுவாமியை வழிப்பட்டனர். பேரூராட்சி தலைவர் வெற்றிவேல், ஒன்றிய செயலாளர் குமார், பேரவை மாவட்ட துணை செயலாளர் சரவணக்குமார், நகர செயலாளர் கேசவன், தொகுதி செயலாளர் சேகர், இலக்கியணி ஒன்றிய தலைவர் சீனிவாசன், தொழிற்சங்க செயலாளர் ஏழுமலை, கூட்டுறவு சங்க தலைவர்கள் சங்கர், சக்திவேல், ரமேஷ், துணை தலைவர் சிவலிங்கம், தொழிற்சங்க நிர்வாகிகள் கலியபெருமாள், சஞ்சீவி, ஆறுமுகம், சேட்டு, செல்வம், தெய்வநாயகம், துரைசாமி, ஜெயபாலன், பாலகிருஷ்ணன், சண்முகம், பழனி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.