மயிலம் முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா வரும் 31ல் துவக்கம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27அக் 2016 05:10
மயிலம்: மயிலம் முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா வரும் 31ம் தேதி துவங்குகிறது. தொடர்ந்து வரும் நவம்பர் 5ம் தேதி இரவு சூரசம்ஹாரம் நடக்கிறது.
மயிலம் வள்ளி, தெய்வானை, சுப்பரமணியர் சுவாமி திருக்கோவில் கந்த சஷ்டி விழா வரும் 31ம் தேதி துவங்குகிறது. இதை முன்னிட்டு அன்று காலை 6:00 மணிக்கு கோவில் திறக்கப்பட்டு சுவாமிக்கு வழிபாடுகள் நடக்கிறது. காலை 11:00 மணிக்கு கோவில் வளாகத்திலுள்ள விநாயகர், பாலசித்தர், வள்ளி, தெய்வானை, சுப்பரமணியர் சுவாமிக்கு சந்தன அபிஷேகம் நடக்கிறது. 12:00 மணிக்கு மூலவர் தங்க கவசத்தில் காட்சியளிக்கிறார். ஒரு வாரத்திற்கு மவுன விரதம் இருக்கும் பக்தர்கள் தினசரி நடக்கும் அபிஷேகம் தீபாரதனையில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்வார்கள். வரும் நவ.5ம் தேதி கந்தசஷ்டி 6ம் நாள் இரவு 7:00 மணிக்கு பாலசித்தர் சந்நிதியில் வேல் வாங்கும் காட்சியும், இரவு 8:00 மணிக்கு சூரம்ஹாரம் நடக்கிறது. இரவு 9:00 மணிக்கு உற்சவர் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். பின்னர் வள்ளி, தெய்வானை, சுப்பரமணியர் கிரிவலத்தில் ஏரளமானவர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்கின்றனர். விழா ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதீனம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் செய்துவருகிறார்.